000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a சோழர் குலப் பெண் |
300 |
: |
_ _ |a அரச உருவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a அர்த்தமண்டப வடபுற பஞ்சரக் கோட்டத்தில் நின்ற நிலையில் உள்ள சோழர் குலப் பெண் |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a கருவறையின் வடபுற பஞ்சரக் கோட்டத்தில் நல்ல உயரமாக சோழர் குலப் பெண் ஒருவள் வைஷ்ணவ நிலையில் இடது காலை நன்றாக ஊன்றி, வலது காலை சிறிதே மடக்கி உடலை வளைவோடு அமைத்து நிற்கிறாள். இவள் சோழர் குல அரசியாகலாம். கூந்தலை அள்ளிக் கொண்டை போட்டு, குந்தளம் என்ற தலைமுடி அலங்காரத்தைச் செய்துள்ளாள். தலையின் நேர் வகிட்டில் தொய்யகம் விளங்குகின்றது. நேர்வகிட்டின் இருமருங்கில் சூரியப்பிரபை, சந்திரப் பிரபை எனப்படும் சுட்டிகள் (புல்லகம்) அணி செய்கின்றன. மேற்காதுகளில் செவிப்பூ, மற்றும் நீள் காதுகளில் உருண்டை வடிவமானதும், வளையம் பொருத்தப்பட்டதுமான விருத்த குண்டலங்கள் திகழ்கின்றன. கழுத்தில் கண்டிகை, பவளமாலை, சரப்பளி, மார்பு வரை நீண்டு தொங்கும் மணியாரம், (ஏகாவளி) கைகளில் தோள்வளை, கடக வளை (முழங்கையில்), முன் கைகளில் இடதில் ஒன்பது கைவளைகள், வலதில் பதினொரு கை வளைககள் ஆகியன அணி செய்கின்றன. பாதங்களில் அரியகம் அழகு செய்கின்றது. இடையில் அரைப்பட்டிகை, தாரகைச்சும்மை ஆகியன விளங்க, மடிப்புகளுடன் நீண்ட பட்டாடை அணிந்துள்ளார். ஆடையின் கொசுவம் முன்புறமாக இடது தொடையில் தொங்கவிடப்பட்டுள்ளது. இடது கையை அரை முழங்கையாக மடித்து இடையில் ஊன்றியபடி விரல்களில் நீண்ட காம்புடைய மலரைப் பிடித்தபடியும், வலது கை கஜ ஹஸ்தத்திலும் அமைந்துள்ளன. கை விரல்களில் நடு விரல் தவிர மற்ற விரல்களில் வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. வில் போன்று வளைந்த நெறித்த புருவங்களும், மிரட்டும் திறந்த கண்களை உடையவளுமாய், விடைத்த நாசியுடன், வனத்த இளமை பொங்கும் தனங்களுடன் (மார்பில் கச்சை ஏதும் காட்டப்படவில்லை. அக்கால வழக்கப்படி மேலாடையின்றி உள்ளாள்) கொப்பூழ் தெரிய, கொடியிடையாளாக எழில் மிக்க தோற்றத்துடன் இப்பெண் விளங்குகிறாள். |
653 |
: |
_ _ |a சோழர் குலப் பெண், சோழர் குல அரசியார், சோழ நாட்டுப் பெண்கள், கும்பகோணம், குடந்தைக் கீழ்க் கோட்டம், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குடந்தைக் கீழ்க்கோட்டம் கோட்டச் சிற்பங்கள் |
710 |
: |
_ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 |
: |
_ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 |
: |
_ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 |
: |
_ _ |a 10.95847464 |
915 |
: |
_ _ |a 79.37757388 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000168 |
barcode |
: |
TVA_SCL_000168 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000168_குடந்தைக்-கீழ்க்கோட்டம்_சோழர்-குலப்-பெண்-001.jpg
|